கென்யாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழு அந்நாட்டு தலைவர் நேராபியை சென்றடைந்துள்ளனர். இதன்போது ஜனாதிபதிக்கும் தூதுக்குழுவிற்கும் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் விசேட விருந்தினராக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அங்கு பயணித்துள்ளார். கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட அழைப்பு விடுத்திருந்தார். ‘சுற்றாடல் சவால் மற்றும் நிலையான பயன்பாடும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான செலவு’ எனும் தொனிப்பொருளில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் உயர்மட்ட குழு கூட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.