மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் குடிநீர் வழங்குமாறு கோரி வவுனதீவில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்.
வவுனதீவில் ள்ள தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் நீர்விநியோக பகுதியை வழி மறித்தே இந்த பேராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
உன்னிச்சை குளத்தில் இருந்து நீர் வழங்கல் நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு மட்டு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
ஆனால் குறித்த நீர் விநியோக திட்டத்தினூடாக உன்னிச்சை உட்பட அதனை அண்டிய பகுதிகளுக்கு நீர் கிடைப்பதில்லையெனவும் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இது தொடர்பிலான கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்து வருகின்ற நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்தகால யுத்த்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குளத்தில் குடிநீர் பெற செல்லும் போது பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் சில நேரங்களில் யானைகள் அடித்து இறக்கும் நிலை ஏற்படுவதாகவும் பிரதேச மக்கள தெரிவிக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டதுடன் மன்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வரகை தந்த மட்டு மாவட்ட த.தே.கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞர்.ஸ்ரீநேசன் சி.யோகேஸ்வரன் நீர்வழங்கல் அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் பிரகாஷ் ஆகியோர் ஆர்ப்பாட்ட காரர்களுடன் கலந்துரையாடினர்.
எதிர்வரும் ஜூன் மாத்துக்குள் குறித்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.