இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று டேர்பனில் நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு லசித் மாலிங்கவும், தென்னாபிரிக்கா அணிக்கு ப்ளெப் டூ ப்ளசீசும் தலைமைதாங்கவுள்ளனர். இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் போட்டி ஆரம்பமாகும். 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர்பில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி 2 – 0 என முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ச்சண்டிகாரில் இடம்பெறவுள்ளது. இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், அவஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச்சும் தலைமைதாங்கவுள்ளனர். ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.