179வது மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு செனசிலிகம என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதான தலைமையில் இடம்பெறுமென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரு மாதிரி கிராமங்கள் நேற்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்பட்டதாக அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.