யெமனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தும் மற்றும் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான் வழித்தாக்குதல்களில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு 800 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதில் 56 பெண்களும் 122 சிறுவர்களும் அடங்குவதாக மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.