பெண்களுக்கு மாத்திரம் தனி பெட்டியை கொண்ட ரயில் இன்று முதல் சேவையை ஆரம்பித்தது. மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்களில் பெண்கள் முகம் கொடுக்கும் சிரமம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அலுவலக ரயில்களான, பங்கதெரிய, சாகரிக்கா, சமுத்ராதேவி, ரம்புக்கண, மஹவ ஆகிய ரயில்களில் மூன்றாவது பிரிவில் ஒரு பெட்டி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.