போதைப்பொருள் ஒழிப்பு துரித வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ரீதியிலான தொடர்புகளை மேம்படுத்தியே நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை தொடர்பான தெளிவுப்படுத்தலும், போதைப்பொருள் ஒழிப்புக்கான விஞ்ஞான ரீதியான நடைமுறைகளை விரிவுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைககள் குறித்து ஆராயும் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.