அலுகோசு பதவிக்கு 102 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் பெண்கள் இருவரும், வெளிநாட்டு பிரஜையொரும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்கள் மூவரும் நேர்முக பரீட்சையில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்மாத இறுக்குள் ஏனைய 99 பேருக்குமான நேர்முக பரீட்சைகள் இடம்பெறுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.