ரத்கம வர்த்தகர்கள் இருவரையும் கடத்திச்சென்று, கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் 42 வயதான தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியாகும். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருவர் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பிரதான நீதவான் நேற்றைய தினம் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.