வணிக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கான குறைந்த பட்ச பண பெறுமதி 5 மில்லியன் ரூபாவிலிருந்து 20 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் குறித்த நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பான வர்த்தமானி, நீதியமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.