78 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 600 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். இத்தாலியிலிருந்து வான்வெளி தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் போதைபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.