வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் 850 தமிழ் பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேஷநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குடா நாட்டில் அண்மை காலமாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் பொலிசாருக்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் பொலிஸ்மா அதிபருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி அறிவிப்பு வெளியிடப்படுமெனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். யாழ். மாநகர முதல்வர் இமானுவெல் ஆர்னோல்ட் வட மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.