சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச மின் உற்பத்தி நிலையத்திற்கான காணி மற்றும் மின்சக்தி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருமலை மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
உத்தேச சம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்காக 500 ஏக்கர் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று காணிகள் வழங்குவது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மின்சாரத்தின் கேள்வி 5 வீதத்தினால் அதிகரித்து வருவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. கெரவலபிடிய மின் உற்பத்தி நிலைய கேள்வி பத்திரத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
மக்களை ஆத்திரமூட்டும் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதுவொரு இலங்கை கம்பனியாகும். இதற்கான இயந்திரங்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. சீனா இதில் ஒரு பங்காளியாகும். அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுக்கே கேள்வி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால் தான் நாங்கள் சீனாவுடன் இணைந்து கொண்டுள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படலாம் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் மக்களை இலக்காக வைத்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.