தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் பயிற்சி போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான டெஸட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. தென்னாபிரிக்காவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்தது. இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி சற்று முன் ஆரம்பமானது. புதுமுக வீரர்கள் பலருக்கு இப்போடடியில் வாய்ப்பளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவுகுழுவின் தலைவர் அசந்த டிமெல் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் மூலம் எதிர்வரும் உலக கிண்ண போட்டிகளுக்கான அணி வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் இலங்கை தெரிவு குழு தெரிவித்துள்ளது.