தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற படகொன்று விபத்திற்குள்ளாகியதுடன், குறித்த படகும் அதில் பயணம் செய்த மீனவர்களும் இன்று அதிகாலை கரைக்கு அழைத்துவரப்பட்டனர். கடந்த 23ம் திகதி குறித்த படகு ஆறு மீனவர்களுடன் கடலுக்கு சென்றது. கடந்த 25ம் திகதி பொத்துவில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது குறித்த படகு கப்பலுடன் மோதி பலத்த சேதத்திற்குள்ளானது. இதில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். மற்றொரு ஆழ்கடல் படகினால் குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு அழைத்துவரப்பட்டனர். சுவசெரிய எம்பியூலன்ஸ் வண்டி மூலம் அவர்கள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்றே இந்த படகுடன் மோதியுள்ளது. தப்பிச்சென்று கொண்டிருந்த குறித்த கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தற்போது திருமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைக்கப்பட்டுள்ளது. விபத்தினால் படகிற்கு சுமார் 50 இலட்சம் ரூபாவுக்குத் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.