நேற்று மாலை 06.35 மணியளவில் கட்டுடுநாயக்கவில் இருந்து டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்த யூ.எல். 225 என்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்திய வான் எல்லையில் வைத்து விமானத்தில் பறவைகள் மோதியதன் காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.பின்னர் பயணிகள் அதே இலக்கத்தையுடைய மற்றொரு விமானத்தில் டுபாய் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
