கிருமி நாசினிகளை அதிகமாகவோ பிழையாகவோ பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இன்று முதல் இதற்கான அதிகாரம் உணவு மற்றும் மருந்துப் பொருள் பரிசோதகர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய 59 உத்தியோகத்தர்கள் இதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.