சிறுநீரக நோய் நிவாரண முகாம் மற்றும் நலன்புரி மத்திய நிலையம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கண்டி மாவட்டத்தில் மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுநீரக நிதியத்திற்கு சொந்தமான 360 மில்லியன் ரூபா திட்டத்திற்கென செலவிடப்பட்டுள்ளது. மத்திய நிலையத்தினூடாக நாளாந்தம் 150க்கும் அதிகமான சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் சம்பந்தமான சிகிச்சைக்களை மேற்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான சிகிச்சை முகாம்கள் மற்றும் பரிசோதனை சேவைகளும் இதில் உள்ளடங்குவதாக சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.