ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்பு நடாத்துவதற்கு தடைவிதிப்பதற்கான யோசனை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த யோசனை திட்டத்திற்கு அமைச்சர் மனோ கணேஷன், அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் மற்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சரி காமினி ஜயவிக்கிரம பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் அமைச்சரவையில் பத்திரத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.