தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணிக்கு வெற்றிபெறும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றன. இன்னும் 8 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 137 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. 197 ஓட்டங்களை வெற்றிஇலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது தனது இரண்டாவது இனிங்சிற்காக இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தது. குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடனும், ஓஷத பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர். ஏற்கனவே தென்னாபிரிக்க அணி தனது முதல் இனிங்சில் 222 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சிற்காக 128 ஓட்டங்களையும் பெற்றது. இலங்கை அணி தனது முதல் இனிங்சிற்காக 154 ஓட்டங்களை பெற்றது. இதேவேளை இலங்கை அணி போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் வரலாற்று சாதனையொன்றையும் தனதாக்கும். தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதலாவது ஆசிய அணியென்ற சாதனையை இலங்கை பதிவுசெய்யுமென கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.