கொட்டகலை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் மீது மோதியுள்ளது. சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.