நீர்வழங்கல் திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நீர்வழங்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை துரித கதியில் நிறைவு செய்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் நேற்றைய தினம் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்களை அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.