நடைபெற்றுவரும் இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான போட்டி இன்று போர்ட் எலிசபத்தில் இலங்கை நேரப்படி பி.ப. 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் குசால் மெண்டிஸ் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை களமிறங்குகின்றது.இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவுள்ளது.இத்தொடரில் 1-0 எனும் அடிப்படையில் இலங்கை முன்னிலையிலுள்ளது.