அக்கரபத்தனை ஹோல்புறூக்கு பெல்மூர் தோட்டத்தில் காணாமல் போன சிறுவன் இன்று அவரது வீட்டின் அருகில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யதீஷ் விதுர்ஷன் எனபடும் குறித்த இரண்டு வயது பாலகன் நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மாலையில் காணாமல் போனதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து நேற்றிரவு பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேடுதல் மும்முரமாக இடம்பெறுவதை அறிந்து கொண்ட கடத்தல்காரன் சிறுவனை மீண்டும் அவரது வீட்டின் அருகில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுவன் அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.