சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்றிட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
நாட்டின் ஜீவநாடிகளான சிறுவர் சந்தியை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் உடல் உள அபிவிருத்திக்கு சாதகமான சுற்றாடலை கட்டியெழுப்புவதே சிறுவர்களை பாதுகாப்போம் செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த செயற்றிட்டத்தில் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. சிறுவர்களை பாதுகாத்து அவர்கள் சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கான பின்புலங்களை ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்றிட்டம் ஜனாதிபதி ஊழியர் படையணியால் செயற்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் தற்போது பரவி வரும் பல்வேறு சமூக விரோத செயல்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதை விசேட தேவையாக இனங்கண்டு பல்வேறு செயற்றிட்டங்கள் நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களை தடுத்தல், பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சுகாதார போசாக்கு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் முக்கியம் பெறுகின்றன. ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் திறமைகளை கட்டியெழுப்புதல் ஆகிய துறைகளும் இவற்றில் அடங்கும். இதன்கீழ் சுகாதாரம், கல்வி, உளவள ஆலோசனை, சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊடாக சிறுவர்களின் நலன்கருதி செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ளும் சிறார் ஆளுமை அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதியின் வெயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் மாற்று திரனாளி மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு பிரவேச பாதையுள்ளிட்;ட ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நிதியுதவி வழங்குதல், நிரந்தர பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் நீர்வசதி மற்றும்; நீர்விநியோகம், குழாய் கட்டமைப்பற்ற பாடசாலைக்கு நிதி வழங்குதல் என்பன ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன. சிறுவர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களின் திருத்த பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஜனாதிபதியினால் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள சிறுவர் காப்பகங்கள் மத்திய நிலையங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆலோசனைகள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சரினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.