யாழ்.கீரிமலை கடற்கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.யாழ் கீரிமலையில் பாதுகாப்பு கடமையிலிருந்த ஒருவர் அறிவித்ததை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பின் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.