தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 20 – 20 கிரிக்கட் போட்டிகளுக்கான அணி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுமென தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கிடையில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதில் முதலாவது போட்டி மார்ச் மாதம் 19 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படுமென தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் செய்தி பிரிவுக்கு அவர் கருத்து தெரிவிக்கும்போது இப்போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். ஸ்ரீ லங்கா 20 – 20 அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படுவார். இந்நிலையில் இப்போட்டியில் அணியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏறபடுத்தப்பட மாட்டதெனவும் அவர் தெரிவித்துள்ளார். உபாதைக்குள்ளாகி அணியிலிருந்து நீக்கப்பட்ட எஞ்சலோ மத்யுசை இப்போட்டிகளில் சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கவில்லையென்றும் அவர் முழுமையாக குணமடைந்த பின்னர் உலக கிண்ணபோட்டிகளை இலக்கு வைத்து ஒருநாள் போட்டிகளில் அவரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.