பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை கிடைக்கப்பெற்ற பின்னர் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யோசனை பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பு சபைக்கு எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சபையை நிறுவதற்கு பிரதான அரசியல்கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரம் குறித்த சபையை நிறுவ எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.