ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதென்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். காலி நுகதுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச கருத்தரங்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.