அன்பால் இணைந்தவர்கள் நேசத்தோடு பாசத்தோடு நீண்டகாலம் ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதியினர் ஒன்றாகவே உலகுக்கு விடை கொடுத்தனர்.
அன்பால் இணைந்து கொண்ட பலர் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் அன்பாக இருந்து, அன்பாக வாழ்ந்து, வயதான காலம் வரை பிண்ணி பிணைந்து வாழ்ந்த பல தம்பதியினருக்கும் உதாரணமாக வாழ்ந்து மறைந்துள்ளனர் ஊருகஸ்மங்சந்தி, அல்கஹவெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த பி.டீ சைமன் 92 வயதிலும், ரி.எம். குணவதி 77 வயதிலும் இவ்வாறு இவ்வுலகை விட்டு சென்றுள்ளனர். இந்த தம்பதியினர் ஒரே தினத்தில் அதுவும் காதலர்கள் தினமான நேற்று முன்தினம் இவ்வுலகிற்கு விடைக்கொடுத்தனர். இது இயற்கை மரணம் தான். ஆனாலும் இவர்கள் எப்போதும் இருவரும் ஒன்றாக மரணிக்க வேண்டுமென பிரார்த்தனை செய்திருப்பார்கள் போலும். இறைவனும் இவர்களது வேண்டுதாலை ஏற்றிருப்பார். அன்பு என்பது சங்கைக்குரியது என்பதை இந்த தம்பதியினர் இந்த மரணத்தின் மூலம் முழு உலகிகிற்கும் பறைச்சாற்றியுள்ளனர்.