சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 111 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கொழும்பு கலால் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யபபட்டார். இத்தாலியில் இருந்து நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட அதி சொகுசு மெத்தைகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாவாகும். சந்தேகநபர் மாரவில மூதுகட்டுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர். இவர் இத்தாலியில் வசித்து வரும் நபர்களினால் இலங்கைக்கு அனுப்படுகின்ற பொருட்களை விநியோகிக்கும் முகவராகவும் செயற்பட்டு வருகின்றார்.