சீகிரியாவை கண்டுகளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரங்களில் இன்று முதல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சீகிரியாவை இன்று முதல் காலை 6.30 மணிமுதல் பார்வையிட முடியும். இதற்கு முன்னர் காலை 7 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை காணப்பட்டது. பெரும்பாலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டதாக மத்திய கலாசார நிதியம் தெரிவிக்கின்றது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே சீகிரியாவை கண்டுகளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனை கருத்திற்கொண்டே நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.