முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை
Related Articles
பிரான்சின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் கிரிஸ்டோப் டெட்டின்கருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரிஸ் நகரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான மஞ்சள் சட்டை போராட்டத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரரும் பங்கேற்றிருந்தார். இதன்போது இரு பொலிஸ் அதிகாரிகள் மீது கிறிஸ்டோப் டெட்டின்கர் தாக்குதல நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பொலிசாரை தாக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. பிரான்சின் குற்றவியல் நீதிமன்றத்தினால் அவருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.