100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நீர்கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொன்சினா மற்றும் கரதரயா என்று அறியப்படும் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளை சேர்ந்த இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.