9 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மஹதிவுல்வெவ – தெவனிபியவர பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – தெவனிபியவர பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவியின் தாயும் தந்தையும் பிரிந்து வாழும் நிலையில் தாயுடன் பழகி வந்த அவரது நண்பர் ஒருவரே தாய் இல்லாத நேரம் வீட்டுக்கு வந்திருந்த வேளை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மொரவெவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.