தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் முதலாவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நேற்று கொழும்புக்கு வருகை தந்த அவர் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கு எவ்வாறு உதவி வழங்க முடியும் என்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதோடு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பல முக்கிய அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.