மன்னார் மனித எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை நாளை
Related Articles
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அமெரிக்க காபன் பரிசோதனை அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான விசேட நீதிமன்ற வைத்தியர் ச்சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த மனித எச்சங்களின் காலம் தொடர்பில் கணிப்பதற்கு அதன் மாதிரிகள் புளோரிடாவுக்கு காபன் பரிசோதனைக்கென அனுப்பிவைக்கப்பட்டன. இதேவேளை குறித்த மனித புதைகுழியில் இன்றைய தினம் 144வது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன. இதுவரை குறித்த மனித புதைகுழியிலிருந்து 315 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ச்சமிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். குறித்த 315 மனித எச்சங்களும், 307 மனித உடல்களுக்கு உரியவையென அவர் குறிப்பிட்டார். இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில், 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென தெரியவந்துள்ளதென அகழ்வு பணிக்கு பொறுப்பான விசேட நீதிமன்ற வைத்தியர் ச்சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment