ஐ நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது சர்வதேச வானொலி தினம். வானொலி சேவையினை உலகளாவிய ரீதியில் ஊக்குவிப்பதனை தனது இலக்காக கொண்டுள்ளது சர்வதேச வானொலி தினம்.
ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தகவல்கள் போன்றவற்றினை வழங்குவதற்கு அப்பால், சாதாரண சமூகத்தில் மற்றும் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் முக்கிய பிரச்சனைகளினையும் சிக்கல்களினையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும் உணர்த்தி நிற்கிறது.