மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அலுகோஸூ பதவிக்கு விண்ணம் கோரப்பட்டுள்ளது. 3வது தடவையாக அலுகோஸூ பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இப்பதவிக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பதவியை விட்டு விலகிச் சென்றமையின் காரணமாகவே மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு சாதாரண சித்திகளை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 45 வயதுக்கு குறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.