சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள ஐந்தாவது கடன் தவணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதியத்தின் அதிகாரிகள் சிலர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக குறித்த கடன் தவணை வழங்கும் நடவடிக்கைகள் தாமதம் அடைந்தன. இலங்கைக்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ள நிலையில் இதில் ஐந்தாம் தவணை நிதியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கைக்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2016-2019 ஆண்டு காலப்பகுதியில் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்தது. இவ்வாறு ஆறு தவணைகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு தவணை கடன்கள் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டன.