வடக்கு மார்க்கத்தினுடனான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் தம்புத்தேகம மற்றும் செனரத்கமவிற்கு இடையில் தடம்புரண்டுள்ளது. வீதியின் உடனான போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தின் ஊடான சில ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன. யாழ்தேவி மற்றும் உத்தர தேவி ரயில்களும் இதில் உள்ளங்குவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.