தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் கொழுந்து பறிக்கும் மபெரும் போட்டியொன்று மடுக்கெலே தோட்டத்தில் இடம்பெற்றது. தலவாக்கலை பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான மட்டுகலே தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் பெருந்தோட்டத்துறையை பாதுகாக்கும் நோக்கிலும் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 30 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று என நடைபெற்ற இப்போட்டியில் இறுதி சுற்று நேற்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.