தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் எதிர்பார்க்கப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விசேடமாக, பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, மேல், மற்றும் வடமேல் மாகாணங்ளிலும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் கூடுதலான பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு கரையோர பகுதிகளில் காலை வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்கள் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.