ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா விமான சேவைகளிலும் ஸ்ரீ லங்கன் கேட்டரிங் கம்பனியிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மே மாதம் 30ம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலத்தை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் பல சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டது. இறுதியான இதன் உத்தியோகபூர்வ காலம் எதிர்வரும் 15ம் திகதியுடன் முடிவடைகின்றது. ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளினதும், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் கம்பனியிலும் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த ஆண்டு இவ்வாணைக்குழுவை ஸ்தாபித்தார்.