அளுகோசு பதவிக்காக எதிர்வரும் திங்கட் கிழமை முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையை இலகுபடுத்தும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் எதிர்வரும் 25 ம் திகதி வரை அளுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.