வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 40 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொரணை, மீமன பகுதியில் பொலிசார் நடத்திய சுற்றிவளைப்பையடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.