பிரித்தானியாவில் உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி இந்திய ரூபா கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விஜய் மல்லையாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரித்தானிய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியது. இந்நிலையிலேயே பிரித்தானிய உள்துறை அமைச்சின் அனுமதிக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். அவர் தற்போது லண்டனில் வசித்துவரும் நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கமைவாகவே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.