புதிய ஏவுகணை கட்டமைப்பொன்று அபிவிருத்தி செய்யப்படும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுத பாவனையை கட்டுப்படுத்தும் உடன்படிக்கையிலிருந்து விலகும் வகையில் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுந்தூர மற்றும் மத்திய தூர ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு தற்போது திட்டமிட்டுள்ளன. இதற்கமையவே புதிய பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.