தாய்லாந்தில் பரவும் நச்சுக்காற்று காரணமாக மக்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய போக்குவரத்து நெரிசல், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் காற்றில் நச்சுத்தன்மை கலக்கிறது. இதனால் மூக்குகளில் இரத்தக்கசிவு, இருமலின் போது இரத்தம் சிந்துதல், கண்களில் இரத்தம் உறைதல் போன்ற பல்வேறு உபாதைகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.