இலங்கை அணி தொடர்பில் மாவன், முரளி கருத்து
Related Articles
நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி கண்டது.இது தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து அதேபோல் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகியோர் கருத்து இலங்கை அணி வெளியிட்டுள்ளனர்.
மாவன் அத்தப்பத்து குறிப்பிடுகையில் இலங்கை அணி பல பின்னடைவுகளை கடந்த காலங்களில் சந்தித்த போதும் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மிக மோசமானது எனவும் மஹேல சங்கக்கார ரங்கன ஹேலத் மற்றும் டில்சான் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கட் நிறுவனம் முன் வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் தெரிவிக்கையில் இலங்கை அணி கடந்த மூன்று நான்காண்டுகளாக இந்த பரிதாப நிலையே தொடர்கின்றது.குசல் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் திறமையுடவர்கள்.எனினும் அவர்களால் தொடர்ந்தும் சிறப்பாக விளையாட முடியவில்லை.இது அவர்களின் கிரிக்கட் வாழ்வை கேள்விக்குறியாக்கும்.இலங்கை அணி சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடும் போது என்ன செய்ய வேண்டுமென்ற வியூகம் இல்லை.அதே போன்று ஆஸி அணியின் ஆட்டமும் சிறப்பானதாக இல்லை.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment